கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர்
.
மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்
.
தயை செய்பவனுக்கு நீர் தயை உள்ளவர்
உத்தமனை நீர் உயர்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதன் அன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே
.
இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே
You must log in to post a comment.