Karthavee En Belane [En Meetpar 5]-Freddy Joseph

karthave-en

 

கர்த்தாவே  என்  பெலனே

உம்மில்  அன்பு கூர்ந்திடுவேன்

துருகமும்  நீர் கேடகம்  நீர்

இரட்சண்ய  கொம்பும்  அடைக்கலம்  நீர்

.

மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்

துர்ச்சனப் பிரவாகம்  புரண்ட போதும்

நெருக்கத்தின் மத்தியில்  குரல் எழுப்ப

உருக்கமாய்  வந்து உதவி  செய்தார்

.

தயை செய்பவனுக்கு  நீர் தயை உள்ளவர்

உத்தமனை  நீர்  உயர்திடுவீர்

புனிதனுக்கு  நீர் புனிதன் அன்றோ

புதிய கிருபையின் உறைவிடமே

.

இரட்சண்ய  கேடகம் எனக்குத் தந்தீர்

உமது  கரம்  என்னை உயர்த்தும்

கர்த்தரை அல்லால்  தேவன் இல்லை

அவரே  எந்தன்  கன்மலையே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.